தினமணி 01.08.2009
ரூ.83 லட்சத்தில் சாலை அமைப்பு பணி
புதுச்சேரி, ஜூலை 31: புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் ரூ.83 லட்சம் செலவில் சிமென்ட் மற்றும் தார் சாலை அமைக்கும் பணியினை உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஒதியம்பட்டு, நமச்சிவாயம் நகர், திரிவேணி நகர், சுல்தான்பேட்டை, முஹம்மதியநகர் ஆகிய பகுதிகளில் ரூ.83 லட்சம் செலவில் சிமென்ட் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
ஒதியம்பட்டு, அண்ணா நகர் சிமென்ட் சாலை மற்றும் பக்க வாய்க்கால் அமைக்கும் பணி ரூ.14.4 லட்சம் செலவிலும், மணவெளி, நமசிவாயம் நகர் தார்சாலை அமைக்கும் பணி ரூ.9.97 லட்சம் செலவிலும், மணவெளி பாரதிதாசன் நகர் தார் சாலை அமைக்கும் பணி ரூ.9.19 லட்சம் செலவிலும், திரிவேணி நகர் இரண்டு பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி ரூ.26.99 லட்சம் செலவிலும், சுல்தான்பேட்டை முஹம்மதியா நகரில் ரூ.23 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஐந்து திட்டப் பணிகளை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தனித் தனியாக தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி கலைமாறன், இளநிலைப் பொறியாளர் சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.