Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைகளில் வெறும் 299 குழிகள் மட்டுமே உள்ளது மாநகராட்சி கூறுகிறது

Print PDF

தினகரன் 11.08.2010

சாலைகளில் வெறும் 299 குழிகள் மட்டுமே உள்ளது மாநகராட்சி கூறுகிறது

மும்பை, ஆக.11: மும்பை நகர சாலைகளில் வெறும் 299 குண்டுகுழிகள் மட்டுமே இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள் ளது.

மும்பையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகளில் அதிக அளவு குண்டும் குழியும் ஏற்பட் டுள்ளது. குண்டுகுழிகளை சரி செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது குறித்து மேயர் ஸ்ரத்தா ஜாதவ் அதிகாரிக ளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து கூடுதல் கமிஷனர் குப்தா அளித்த பேட்டியில், "மாநக ராட்சி ஒப்பந்ததாரர் கள் சிலர் சாலைகளை பழுது பார்க்க தரமான பொருட்களை பயன்படுத் தாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலம் வரை சாலை கள் பழுதடையாமல் இருக்கவேண்டும். அவ்வாறு பழுதடைந்தால் அதனை சம்மந்தப்பட்ட ஒப்பந்த தாரரை கொண்டு சரி செய்யும்படி கேட்டுக்கொள் ளப்படும்.

அல்லது அந்த ஒப் பந்ததாரருக்கு மேற் கொண்டு பணிகள் கொடுக் கப்படாது. சாலைகள் குண்டும் குழியும் இல்லாமல் இருப்பதற்கு மும்பை துறைமுகம், மாநில சாலை மேம்பாட்டு கழகம், பொதுப் பணித்துறை மற்றும் எம்.எம்.ஆர்.டி..யுடன் மாநகராட்சி இணைந்து செயல்படும்" என்று தெரி வித்தார்.

மும்பையில் மழை காரணமாக சாலைகளில் 5425 குண்டுகுழிகள் ஏற்பட்டதாகவும் இதில் 5116 குண்டுகுழிகள் நிரப்பி சரி செய்யப்பட்டு விட்ட தாகவும் 299 குண்டுகுழிகள் மட்டுமே இன்னும் நிரப்பப் படாமல் இருப்பதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரேல் பகுதியில் 545 குண்டுகுழிகள் இருந்தது. அதில் பெரும் பாலானவை சரி செய்யப் பட்டு விட்ட நிலையில் தற்போது 8 குண்டுகுழிகள் மட்டுமே இன்னும் நிரப்பப் படாமல் இருக்கிறது.