Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய சிமென்ட் சாலை: கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 16.08.2010

புதிய சிமென்ட் சாலை: கூட்டத்தில் முடிவு

சிதம்பரம்: அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப் பட்டது.சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கூட்டம் தலைவர் கீதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன், துணைத் தலைவர் குஞ்சு பாண்டியன் முன் னிலை வகித்தனர்.கூட்டத்தில், அண்ணாமலை நகர் பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் புதிய இரண்டு கைப் பம்புகள், சிமென்ட் குப்பைத் தொட்டிகள் அமைத்தல். 450 வடிகால் சிலாப்புகள் அமைப்பது. வெள்ளக் குளம், கொத்தங்குடி பகுதியில் சிமென்ட் சாலை, ,வெள்ளைக்குளம் பகுதியில் ஆழ்துளை கிணறு, நீர்மூழ்கி மின் மோட்டார் மற்றும் பம்பு அறை. கே.ஆர்., நகரில் தார் சாலை, ஆதி திராவிடர் காலனியில் கழிப்பிடம் சீரமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.