Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.5.70 கோடி ஒதுக்கீடு; இனி, ரோடு பளபளக்கும்!

Print PDF

தினமலர் 20.08.2010

ரூ.5.70 கோடி ஒதுக்கீடு; இனி, ரோடு பளபளக்கும்!

திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மோசமான நிலையில் உள்ள ரோடுகளை புதுப்பிப்பதற்காக, அரசின் சிறப்பு திட்டம் மூலமாக, ரூ.5.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது; நகராட்சி தலைவி விஜயலட்சுமி தலைமை வகித்தார். ரூ.5.70 கோடியில் ரோடுகள் புதுப்பிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட விவாதம்:

விஜயகுமார் (.தி.மு..,): சந்திராபுரம் குட்டை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர்வெல் அதிகப்படுத்த வேண்டும்.

பத்ரன் (தி.மு..,): தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, வி.ஜி.வி., கார்டனில் உள்ள போர்வெல்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

சேதுபதி (காங்.,): அங்கீகராம் இல்லாத இடங்களில் வீடு கட்டியவர்களுக்கு, மின் வசதி உள்ளிட்டவை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நகராட்சி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திருநகரில் ரோடு மோசமாக உள்ளது; அதற்கு உரிய நடவடிக்கை தேவை. மேட்டுப்பாளையம் தண்ணீர் முறையாக கிடைக்க வேண்டும்; வினியோகத்தில் கவுன்சிலர்களின் தலையீடு இருக்கக்கூடாது.

தெய்வாத்தாள் (.கம்யூ.,): ஒன்பதாவது வார்டுக்கு எவ்வித பணியும் தீர்மானத்தில் வரவில்லை. தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது.

சுப்ரமணியம் (மா.கம்யூ.,): பொது நிதி பணிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது. கால நிர்ணயம் செய்து, திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்.

பழனிசாமி (.தி.மு..,): சென்னிமலைபாளையம் மயான ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு செல்லும் ரோட்டை புதுப்பிக்க வேண்டும். குடிநீர் தொட்டி அருகில் உள்ள காலியிடத்தை பாதுகாக்க வேண்டும். புதுப்பாளையத்தில் இருந்து வஞ்சிவரம்புதூர் வரையுள்ள ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.

தலைவி விஜயலட்சுமி, செயல் அலுவலர்(பொறுப்பு) ராமசாமி ஆகியோர் பதிலளித்ததாவது: சிறப்பு திட்டத்தில் போடப்படும் ரோடுகளை குழுவினர் ஆய்வு செய்வர்; அதன் பின், பணிகள் மேற்கொள்ளப்படும். பொது நிதி திட்டங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. சந்திராபுரம், நல்லூர், வி.ஜி.வி., கார்டன் பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தெருநாய் பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். சிறப்பு திட்டத்தின் கீழ், மோசமான ரோடுகளை மட்டுமே புதுப்பிக்க முடியும்; ஒன்பதாவது வார்டில் அதற்கான வாய்ப்பு இல்லை. கூடுதல் குடிநீருக்கு அரசின் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கொசு மருந்து அடிக்க புதிய "ஸ்பிரேயர்' வாங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கொசு பிரச்னை இருக்காது. அங்கீகரிக்கப்படாத மனை பிரச்னை தொடர்பாக வரும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.