தினமலர் 24.08.2010
நடைபாதை பணிக்கு பூமி பூஜை
விருத்தாசலம் : விருத்தாசலம் கடை வீதி பகுதியில் நடை பாதை அமைக்கும் பணிக் கான பூமி பூஜை விழா நடந்தது. விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், நகரை அழகுபடுத்தும் வகையிலும் கடைவீதி சிக்னலில் இருந்து பழைய தபால் நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும், விருத்தகிரீஸ்வரர் கோவிலின் முன்புறம் உள்ள சாலையின் ஒரு புறத்திலும் வடிகாலுடன் கூடிய நடை பாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்காக நெடுஞ் சாலைத் துறை சார்பில் சாலை மேம்பாட்டு திட் டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாயும், நகராட்சி சார் பில் 13 லட்சம் என 38 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தில்லைகோவிந் தன், கமிஷனர் திருவண் ணாமலை முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, கவுன்சிலர்கள் அரங்கபாலகிருஷ்ணன், ராமு, கர்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.