தினகரன் 31.08.2010
கும்பகோணத்தில் ரூ10 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி நகராட்சி கூட்டத்தில் முடிவு
கும்பகோணம், ஆக. 31: கும்பகோணம் நகரில் ரூ10 கோடி செலவில் சாலைகளை புதுப்பிக்க நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கும்பகோணம் நகராட்சியின் அவரச கூட்டம் தலைவர் தமிழழகன் தலை மையில் நேற்று நடைபெற் றது. கூட்டத்தில் ஆணையர் பூங்கொடி அருமைக்கண், துணைத்தலைவர் தர்மபாலன், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.
சிறப்பு சாலைகள் த¤ட்டத்தின் கீழ், கோயில்கள், முக்கிய புராதன சின்னங் கள், பள்ளிகள், தொழிற்கூடங்கள், போக்குவரத்துக் கான முக்கிய சாலைகள் ஆகிய இனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை யில் பாதாள சாக்கடை, குடி நீர் விநியோகம் குழாய் அமைத்தல், மழை மற்றும் இடர்பாடுகள் ஆகிய இனங்களால் பாதிப்பான கும்பகோணம் நகராட்சி பகுதியில் 50 கிலோ மீட்டர் தூரத்தி ற்கு ரூ10கோடி மதிப்பீட்டில் சாலை புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்வதற்கான கருத் துருவை அனுப்பி வைத்து நகராட்சி இயக்குநரகத் திடமிருந்து நிதி பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக உறுப்பினர் கா மேஷ் பேசுகையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் எனது வார்டில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தெருக்களில் சாலைகளும் சரியில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த பொறியாளர், நடப்பு நிதியா ண்டில் விடுபட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணை ப்பு வழங்கப்படும் என் றார். பாமக உறுப்பினர் பீட் டர் லாரன்ஸ் பேசுகையில், 25 வார்டு பகுதியில் ராதா நகர், கிருஷ்ணப்பா மேலசந்து சாலைகளை இத்திட்டத்தில் சேர்க்கவில்லை என்றார். பொறியாளர் கனகசுப்புரத்தினம் பேசு¬கையில், தாங்கள் குறிப்பிட்ட நகர் நகராட்சி பகுதியில் உள்ளதா என ஆய்வு செய்த பின் இத்திட்டம் இறுதி வடிவம் பெறும்போது சேர்த்துகொள்ளப்படும் என்றார்.