தினமணி 31.08.2010
ரூ 2.32 கோடியில் சாலைகள், வடிகால்கள் சீரமைப்புதக்கலை
, ஆக. 30: பத்மநாபபுரம் நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ 2.32 கோடியில் 40 சாலைகள், மற்றும் மழைநீர் வடிகால்கள் சீரமைக்க திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அ
.ரேவன்கில் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் செல்லமுத்து, பொறியாளர் சனல்குமார், ஆரம்ப சுகாதார ஆய்வாளர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் பெருமாள், துணைத் தலைவர் முகமது சலீம், மற்றும் உறுப்பினர்கள் 20 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டம் தொடங்கியவுடன் தலைவர் அ
.ரேவன்கில், இயற்கை மற்றும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள சாலைகள் மற்றும் சாலை அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகி பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய அரசு ரூ 2.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படி புலியூர்குறிச்சி சந்தை வழி தேசிய நெடுஞ்சாலை முதல் பத்மநாபபுரம் கோட்டை சுவர்வரை கருந்தளம் புதுப்பித்தல்
, மழைநீர் வடிகால் அமைத்தல்.குமாரகோவில் வேளிமண்டபம் முதல் நூருல் இஸ்லாம் கல்லூரி வரை கருந்தளம் அமைத்து மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல்
,வார்டு எண்
5 அண்ணா காலனி முதல் கோட்டைச்சுவர் கிழக்கு தெற்கு மூலை வரை கான்கிரிட் தளம் அமைத்தல், அரண்மனை சாலை முதல் துப்பரவு பணியாளர் குடியிருப்பு வரை மழைநீர் வடிகால் அமைத்து கருந்தளம் புதுப்பித்தல்,இது போன்று பல்வேறு வார்டுகளில் சாலைகள் செப்பனிடவும்
, வடிகால்கள் கட்டவும் மொத்தம் 22 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பழுடைந்தசாலைகள் 18 கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 40 பழுதடைந்த சாலைகள், வடிகால்கள் சீரமைக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.உறுப்பினர் முகமதுராபி பேசுகையில்
, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பஸ்பாஸ், ஓய்வூதியம் போன்ற சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.தக்கலை பேருந்து நிலையத்தில் நுழைவு வாயில் இல்லை
. எனவே நுழைவுவாயில் கட்டி காமராஜர் பெயர் வைக்கவேண்டும் என்றார் முகமது ராபி.இதற்கு பதிலளித்து தலைவர் பேசுகையில்
, திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் உறுப்பினர்களின் அமர்வு படி ரூ 330 ஆக இருந்ததை ரூ 600 உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.மக்கள் பணி செய்யதான் நாம் வந்துள்ளோம்
. இதை தீர்மானமாக நிறைவேற்றி அனுப்ப முடியாது. அரசு தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.பின்பு கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள
8 புதிய கடைகளுக்கும் மறு ஏலம் நடத்தப்படும் எனறார் தலைவர்.