தினகரன் 06.09.2010
ரூ13.30லட்சத்தில் தார் சாலை
பெருந்துறை, செப். 6: பெருந்துறை தொகுதி பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் சடையகவுண்டன் வலசு ராசாகோயில் பகுதியில் இருந்து தோப்புபாளையம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.13.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் பணி துவக்க விழா நடந்தது.இதில் எம்எல்ஏ பொன்னுதுரை பணியைத் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் இளங்கோ, செயல்அலுவலர் வில்லியம், ஜேசுதாஸ், தொகுதி அதிமுக செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.