தினமணி 06.09.2010
வால்பாறை சாலைகளை பராமரிக்க 2.5 கோடி நிதி ஒதுக்கீடு
வால்பாறை, செப்.5: வால்பாறை பகுதியில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சிகளின் கூடுதல் இயக்குநர் தெரிவித்தார்.
தமிழக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வால்பாறை பகுதியில் பழுதடைந்த சாலைகளை ஆய்வு செய்வதற்காக நகராட்சிகளின் கூடுதல் இயக்குநர் துரை சந்திரசேகர் வால்பாறை பகுதிக்கு வந்தார்.
வால்பாறையில் உள்ள குமரன் ரோடு, அரசு மருத்துவமனை ரோடு, மார்க்கெட் ரோடு, சக்தி, தலநார், நடுமலை, நல்லகாத்து உள்ளிட்ட எஸ்டேட் ரோடுகளை ஆய்வு செய்த அவர், இதனை சீரமைக்க 2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நகராட்சி மண்டல இயக்குநர் விஜயலட்சுமி, வால்பாறை நகராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார், பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.