தினமலர் 21.09.2010
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சாலை பணிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலை மேம் பாட்டு பணிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை சேர்மனிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.உள்ளாட்சிகளில் சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் நெல்லிக் குப் பம் நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. இதற்கான நிர் வாக அனுமதி உத்தரவை சென் னையில் நடந்த நிகழ்ச்சியில் சேர்மன் கெய்க் வாட் பாபுவிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது சேர்மன் கெய்க்வாட்பாபு, நெல் லிக்குப்பம் நகராட்சி பின் தங் கிய, வருமானம் இல் லாத நகராட்சி என்பதால் கூடுதல் நிதி வேண்டும் என துணை முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார்.