தினமலர் 22.09.2010
பொள்ளாச்சி நகராட்சிக்குசாலை மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு
பொள்ளாச்சி:தமிழக அரசு மூலம் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து பொள்ளாச்சி நகராட்சிக்கு ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நகராட்சி தலைவர் ராஜேஸ்வரியிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் சாலை மேம்பாட்டுக்காக ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது. முதல்கட்டமாக பொள்ளாச்சி நகராட்சிக்கு சாலை மேம்பாட்டுக்காக ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான, நிர்வாக அனுமதி ஆணையை சென்னையில் நடந்த விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் நகராட்சி தலைவர் ராஜேஸ்வரியிடம் வழங்கினார். இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.பொள்ளாச்சி நகராட்சி சாலைகள் மேம்பாட்டுக்காக, அரசு ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நிர்வாக அனுமதி ஆணையை துணை முதல்வர் ஸ்டாலின், நகராட்சி தலைவர் ராஜேஸ்வரியிடம் வழங்கினார்.