தினமணி 23.09.2010
தருமபுரி நகராட்சி சாலை மேம்பாட்டுப்பணிக்கு ரூ.5.50 கோடி ஒதுக்கீடு
தருமபுரி, செப்.22: தருமபுரி நகராட்சியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தருமபுரி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதைசாக்கடை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்கவும், நகரில் பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பிக்கவும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு சாலை அபிவிருத்தித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இப்பணிகளுக்கான ஆûணையை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி நகர்மன்றத் தலைவர் டி.சி.பி.ஆனந்தகுமாரராஜாவிடம் வழங்கினார்(படம்). நகராட்சி ஆணையர் அண்ணாதுரையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அக்டோபர் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டு, 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என டி.சி.பி.ஆனந்தகுமாரராஜா தெரிவித்தார்.