Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல் நகராட்சியில் புதிய சாலை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 29.09.2010

திண்டுக்கல் நகராட்சியில் புதிய சாலை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

திண்டுக்கல், செப். 29:திண்டுக்கல் நகராட்சி பகுதியில் புதிய சாலை அமைக்க ரூ,10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டபணிக்காக நகரின் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டது. குழிகள் தோண்டப்பட்ட இடங்களில் பெருமளவில் திட்டபணிகள் முடிவடைந்தது. இப்பணிகள் முடிந்த நகரின் முக்கிய பகுதிகளான ஸ்கீம்ரோடு, ரவுண்ரோடு, மெயின்ரோடு, பெல்பார்க்ரோடு உள்ளிட்ட 8 கி.மீ. து£ரத்திற்கான சாலைகள் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது. மேலும் 10 கி.மீ. து£ரத்திற்கான சாலைகள் பேவர்ரோடுகளாக அமைக்கப்படுகிறது. ரூ.2.6 கோடி மதிப்பில் ராணி மங்கம்மாள் சாலை நடுவில் விளக்குகள் அமைத்து அவற்றை இரு வழிச்சாலைகளாக தனியாக பிரித்து தரம் உயர்த்தப்படுகிறது. இதேபோல் ரூ.1.8 கோடி மதிப்பில் ரவுண்ட்ரோடு சாலையும் அதில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவதற்காக தனிப்பாதைகள் மற்றும் ஓய்வு இருக்கைகளும் அமைக்கப் படுகிறது. இது தவிர முக்கிய சாலைகளை இணைக்கும் துணை சாலைகளும் புதியதாக அமைக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் நேற்று தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்த ரூ.10 கோடிக்கான நிர்வாக அனுமதி உத்தரவை வருவாய்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கமிஷனர் லெட்சுமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நடராஜன், தலைமை பொறியாளர் ராமசாமி, நகர்நல அலுவலர் வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.