தினகரன் 07.10.2010
திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் தகவல் சாக்கடை பணி முடிந்த பகுதியில் ரூ1.5 கோடியில் சாலை சீரமைப்புதிருவொற்றியூர்
, அக்.7: திருவொற்றியூர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் முடிவடைந்த சில இடங்களில் ரூ1.5 கோடி செலவில் சாலைகள் போடப்படும் என நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.திருவொற்றியூர் நகராட்சி மேற்கு பகுதியில்
41 முதல் 48வது வரை உள்ள வார்டுகளில் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் உள்ளன. இதில் சுமார் 35 கிலோ மீட்டர் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பல இடங்களில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தெருவில் நடந்து செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். பாதாள சாக்கடை பணி நடந்து வருவதால் சாலைகள் போட முடியாது என மறுக்கப்பட்டது.இதனால்
, பாதிக்கப்பட்ட மக்கள் திருவொற்றியூர் நகராட்சியை பலமுறை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் கலைச்செல்வனிடம் கேட்டபோது, ‘நகராட்சி பகுதியில் ரூ176 கோடியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலைகள் போட முடியாத சூழ்நிலை உள்ளது. இருப்பினும் பணிகள் முடிவடைந்த சில இடங்களில் ரூ1.5 கோடி செலவில் சாலைகள் போட நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.