Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமநாதபுரம் நகரில் சாலைகள் சீரமைக்க ரூ.8.06 கோடி ஒதுக்கீடு நகர்மன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 07.10.2010

ராமநாதபுரம் நகரில் சாலைகள் சீரமைக்க ரூ.8.06 கோடி ஒதுக்கீடு நகர்மன்ற தலைவர் தகவல்

ராமநாதபுரம், அக்.7; ராமநாதபுரம் நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.8.06 கோடி ஓதுக்கீடு பெறப்பட்டுள்ளதாக நகர்மன்ற தலைவர் லலிதகலா ரத்தினம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளும் பயன்பெறும் வகையில் ரூ.30 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.. ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்ததன் பயனாக நீண்ட கால கனவு திட்டமானது நிறைவேறும் தருவாயில் உள்ளது.

. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குழிகள் தோண்டப்பட்டதால் சாலைகள் சேதமுற்று காணப்பட்டது. நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க ரூ.8.6 கோடியை தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதற்கான பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமான் கூறுகையில், "தற்போது பாதாளசாக்கடை திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பொதுமக்கள் அளிக்க வேண்டிய தொகையை செலுத்திய பகுதிகளில் சாலைகள் துரிதமாக அமைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு கோரி பணம் செலுத்த தாமதமாகும் நிலை ஏற்பட்டால் போடப்படும் சாலைகள் சேதம் ஏற்படும். இதனால் விரைவாக தொகையை செலுத்தி பொதுமக்கள் இணைப்புகளை பெற அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகரில் 17.75 கி.மீ. சாலைகள் சீரமைக்க ரூ.8.06 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது இதன் மூலம் தற்போது 4 மீட்டருக்குள் உள்ள சாலைகள் அனைத்தும் சிமென்ட் சாலையாக விரைவில் அமைக்கப்படுகிறது. தற்போது மழைகாலம் முடிந்த பிறகு தார்சாலைகள் அமைக்கும் பணி விரைவாக தொடங்கப்படும்Ó என்றார்.