தினகரன் 11.10.2010
கடலூர் நகராட்சி பகுதியில் ரூ10 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணி ஐயப்பன் எம்எல்ஏ தகவல்கடலூர்
, அக். 11: கடலூர் நகராட்சி பகுதியில் ரூ.10 கோடியில் சாலை சீரமைப்பு மற்றும் புதிய சாலைகள் போடும் பணி விரைவில் துவங்கவுள்ளது என ஐயப்பன் எம்எல்ஏ கூறினார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில் மரம் நடுவிழா லட்சு சோரடியா நினைவு மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தொழிலதிபர் பாலு, பள்ளி தாளாளர் மாவீர்மல் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தனர்.குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்
. செயலாளர் செல்வகணபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐயப்பன் எம்எல்ஏ எஸ்.எஸ்.ஆர் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பேசியதாவது; உலகளவில் மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாகவும், வரவேற்கத்தக்க வகையிலும் செயல்படுத்தி வருவதில் முதன்மையாக திகழ்கிறார் முதல்வர் கருணாநிதி. தற்பொழுது குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறி ஏழை மக்களின் வாழ்வில் வளம் சேர்த்து வருகிறது. எனவே பல்வேறு கட்சிகள் இருந்தாலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைப்பதில் சிறந்த அரசாக திமுக தலைமையிலான அரசு அமைந்துள்ளது. நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து ரூ.10 கோடியில் சாலைகள் சீரமைக்கவும், புதிய சாலை பணிகள் மேற்கொள்ளவும் விரைவில் பணிகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.விழாவில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் ரங்கநாதன்
, பொதுச் செயலாளர் மருதவாணன், நகர மன்ற உறுப்பினர் சார்பில் சலீம், துணைப்பொதுச் செயலாளர் வெங்கடேசன், உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். திருப்பாதிரிப்புலியூர் காவல்துறை சார்பில் ஆட்டோ நிறுத்துமிடம் திறந்து வைக்கப்பட்டு வாகனங்களின் முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. குடியிருப்போர் நலச்சங்க பொருளாளர் சம்பத்குமார், துணைத் தலைவர் விருத்தாம்பாள் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். இணைச் செயலாளர் ராசு நன்றி கூறினார்.