தினமணி 14.10.2010
தார்சாலை சீரமைப்பு துவக்கம்
கோபி, அக். 13: கோபி லக்கம்பட்டி பேரூராட்சியில் தார்சாலை சீரமைக்கும் பணியை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சி 14-வது வார்டுப் பகுதியில் தார்சாலை பழுதடைந்து இருந்தது. இச் சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தார்ச்சாலை பராமரிப்புக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோபி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன்,ரூ 2.65 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
தார்சாலை சீரமைப்புப் பணிகள் தொடக்க விழா கோபி வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் தனசீலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி முன்னாள் தலைவர் வேலுமணி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் பணிகளைத் தொடங்கி வைத்தார். பொதுமக்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.