தினகரன் 15.10.2010
29 சாலை அமைக்க ரூ5 கோடி மன்னார்குடி நகர பகுதியில் நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
மன்னார்குடி, அக். 15: மன்னார்குடி நகர பகுதியில் ரூ.5 கோடியில் 29 சாலைகள் அமைக்க நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார்குடி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் கார்த்திகா உத்தமன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தமிழரசி, நகராட்சி ஆணையர் மதிவா ணன், பொறியாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
திமுக கவுன்சிலர் மதியரசன் பேசுகையில், பஸ் நிலைய பகுதியில் கழிவறை சரியாக பராமரிக்கப்படவில்லை. கொசு மருந்து சரி வர அடிப்பதில்லை என்றார். அதிமுக கவுன்சிலர் சுதா பேசுகையில், மேலராஜவீதியில் குப்பை அள்ளப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் நோய்கள் பரவும் நிலை உள்ளது என்றார். திமுக கவுன்சிலர் வீரக்கு மார் பேசுகையில், மீன் மார் க்கெட் கட்டுமான பணியை விரைவில் துவக்கவேண்டும். எரிவாயு தகன மேடை அமைக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் பணியை குறித்த காலத்தில் துவக்காவிட்டால் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதே கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர்கள் ஹஜ்மைதீன், மதியரசன், சுதா உள்ளிட்டோர் பேசி னர். திமுக கவுன்சிலர் கலைவாணன் பேசுகையில், நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.
ஆணையர் மதிவாணன் பேசுகையில், புதுக்கோட்டை, தஞ்சை, பட்டுக்கோட்டை மற்றும் மன்னார் குடி நகரங்களில் எரிவாயு தகன மேடை அமைக்க ஒரே நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பணியாக முடித்துக்கொண்டு வருகின்றனர். மன்னார்குடி பணியை அடு த்த நகர்மன்ற கூட்டத்திற் குள் துவக்கவில்லையெனில் மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி நடவடிக்கை எடுப் போம் என்றார். நகராட்சி தலைவர் கார்த்திகா உத்த மன் பேசுகையில், மன்னார் குடி நகரில் 29 சாலை பணி கள் மேற்கொள்ள ரூ4.93 கோடிக்கு முதல் கட்டமாக தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மன்னார்குடியில் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த 2 அம்சங்களும் கூட்ட நிலை தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது என்றார்.
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை, அடிப்படை வசதி கட்டிடம், மாடல் நகராட்சிப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் சலீம், வடுகநாதன், கார்த்திகேயன், ராஜா, புனிதா, கோபி, கண்ணதாசன், கீதா உள்ளிட்டோர் பேசினர்.