தினகரன் 18.10.2010
சுரண்டை பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் சாலைபணிசுரண்டை
, அக்.18: சுரண்டை பேரூராட்சிக்குட்பட்ட அழகுபார்வதியம்மன் கோயில் ரத வீதி, காந்தி பஜார் மற்றும் 16, 17, 18 வார்டுக்குபட்ட இடங்களில் ரூ.40 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலைப்பணி நடந்து வருகிறது. இப்பணிகளை பேரூராட்சி தலைவர் கோமதிபழனிநாடார், செயல்அலுவலர் சாமுவேல்துரைராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனிநாடார், பொறியாளர் ஹரிகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயபால், சீனிவாசன், நகர காங். துணைத்தலைவர் பால்சண்முகவேல், பொருளாளர் ராஜேந்திரன், தொண்டரணி முனியாண்டி, தெய்வேந்திரன், நல்லாசிரியர் செல்லத்துரைபாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர்.