Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வி.கே.புரத்தில் சாலைமேம்படுத்தும் பணி துவக்க விழா

Print PDF

தினமலர்             19.10.2010

வி.கே.புரத்தில் சாலைமேம்படுத்தும் பணி துவக்க விழா

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் நேற்று அம்பை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்படுத்தும் பணி துவக்க விழா நடந்தது.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். அம்பை ஒன்றியக்குழு துணைத் தலைவர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தார். அம்பை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார் வரவேற்றார். நெல்லை கோட்ட பொறியாளர் சவுந்திரராஜ் திட்ட விளக்கவுரையாற்றினார்.

அம்பை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கரந்தை முதல் அம்பை ராணி பள்ளி வரை ரூ.95.30 லட்சம், வாகைகுளம் விலக்கு முதல் மன்னார்கோவில் விலக்கு வரை மற்றும் மேலமாதாபுரம் - கடையம் பெரும்பத்து வரை ரூ.91.60 லட்சம், அம்பை ராணி பள்ளி முதல் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளி வரை மற்றும் பாபநாசம் தாமிரபரணி லாட்ஜ் முதல் டெப்போ வரை ரூ.96.40 லட்சம், பாபநாசம் டெப்போ முதல் லோயர் டேம் வரை மற்றும் 2வது செக்போஸ்ட் முண்டந்துறை வரை ரூ.54.70 லட்சம்.நெல்லை - பொட்டல்புதூர் சாலையில் வடக்கு பாப்பான்குளம் முதல் காவூர் விலக்கு வரை ரூ.94.20 லட்சம், கல்லிடை முதல் சிங்கம்பட்டி வரை ரூ.50.60 லட்சம், கடையம் தோரணமலை சாலை ரூ.38.50 லட்சம், கல்லிடை முதல் மணிமுத்தாறு வரை ரூ.44 லட்சம், ஆழ்வார்குறிச்சி சிவசைலம் சாலையிலிருந்து பறம்பு வரை ரூ.19.80 லட்சம், கோவில்குளம் - சாட்டுபத்து சாலை ரூ.13.20 லட்சம், கடையம் கட்டேரிபட்டி சாலை ரூ.19.80 லட்சம், டாணாவில் சேதமடைந்த பாலம் ரூ.41.80 லட்சம், ஒமேகா சிப்ஸ் எதிரேயுள்ள பாலம் ரூ.5 லட்சத்திலும் மொத்தம் ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் துவக்கப்பட்டன.இப்பணியை தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் துவக்கி வைத்து பேசியதாவது:-அம்பை சட்டசபை தொகுதியில் 2006-07ம் ஆண்டு சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக 5 கோடியே 13 லட்ச ரூபாயும், 2007-08ம் ஆண்டில் 2 கோடியே 70 லட்சமும், 2008-09ம் ஆண்டில் 8 கோடியே 31 லட்சத்து 75 ஆயிரமும், 2009-10ம் ஆண்டு 6 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், 2010-11ம் ஆண்டு 6 கோடியே 65 லட்ச ரூபாயும் ஆக மொத்தம் அம்பை தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை மேம்பாட்டிற்கு மட்டும் சுமார் 5 ஆண்டு காலத்தில் 30 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

சாலை மேம்பாட்டு பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு இவ்வளவு தொகையை செலவு செய்து கொண்டிருக்கும்போது மற்ற துறைகளுக்கும் முதல்வர் அதிகமாக நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது சாலை விரிவாக்க பணிக்காக விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு 2 கோடி ரூபாயும், அம்பை நகராட்சிக்கு 2 கோடி ரூபாயும், மணிமுத்தாறு நகராட்சிக்கு ஒன்றரை கோடி ரூபாயும், ஆழ்வார்குறிச்சிபஞ்.,சிற்கு 60 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுதவிர தமிழ்நாடு அரசு சார்பாக அம்பை தொகுதியில் மட்டும் சாலை மேம்பாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முண்டந்துறை பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலை நடைபெறாமல் இருந்து வருகிறது. அந்த பாலத்தை கட்டுவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு சபாநாயகர் ஆவுடையப்பன் பேசினார்.விழாவில் கடையம் பஞ்., யூனியன் சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன், அம்பை நகராட்சி தலைவர் பிரபாகரபாண்டியன், கடையம் தமிழ்நாடு அரசு மாநில நீர்வள ஆதார அமைப்புக்குழு உறுப்பினர் குமார், மணிமுத்தாறு டவுன் பஞ்., தலைவர்கள் முருகன் சுப்பிரமணியன், பொன்ஸ், வி.கே.புரம் நகராட்சி நிர்வாக அதிகாரி முருகன் உட்பட அரசுத்துறை அதிகாரிகள், அம்பை உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் தனசேகர், உட்பட நெடுஞ்சாலைத்துறையினர், திமுகவினர் கலந்து கொண்டனர்.அம்பை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சின்னச்சாமி நன்றி கூறினார்.