Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எட்டயபுரத்தில் ரோடு போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

Print PDF

தினமலர் 25.10.2010

எட்டயபுரத்தில் ரோடு போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

எட்டயபுரம் : எட்டயபுரம் டவுன் பஞ்.,பகுதியில் ரோடு போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எட்டயபுரம் டவுன் பஞ்.,ஆபிசில் பஞ்.,தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 2010-2011 ம் ஆண்டு சிறப்பு சாலைதிட்டம் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருநெல்வேலி டவுன் பஞ்.,உதவி இன்ஜி.,சத்தியமூர்த்தி கலந்து கொண்டார். எட்டயபுரம் வர்த்தகர் சங்கத் தலைவர் ராஜா, பொருளாளர் பரமசிவம், துணை தலைவர் வெங்கடேஷ்ராஜா, கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ், நிர்வாக குழு குணசேகரன் மற்றும் தூது குழுவினர் டவுன் பஞ்.,துறை உதவி இன்ஜி.,சத்தியமூர்த்தியை சந்தித்து கோரிக்கை மகஜர் கொடுத்தனர்.

மகஜரில் குறிப்பிட்டுள்ளதாவது, எட்டயபுரம் மேலரதவீதியிலிருந்து சந்திரன் கல்யாண மண்டபம் வரை ஊருக்கு நடுவில் கடை பஜார் பகுதியில் பணிதுவங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஜல்லிகள் குவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த பணியை தீபாவளிக்குள் முடித்து போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். மேலும் நடுரோடு பட்டத்து விநாயகர் கோயில் அருகிலிருந்து சந்திரன் கல்யாண மண்டபம் வரை ரோடு போடும் போது உயரம் அதிகரிக்காமல் பழைய ரோட் டை கொத்தி அதே இப்போ து உள்ள உயரத்தில் ரோடு போட வேண்டும்.

இதற்கு மேல் உயரம் கூட்டினால் வீடுகள் பள்ளத்திற்குள் அமைந்தது போல் ஆகிவிடும். மழைகாலங்களில் ரோட்டில் பெய்யும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே பழைய உயரத்திலேயே ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வடக்குரதவீதியிலிருந்து நாவிலக்கன்பட்டி செல்லும் ரோடு (டவுன் பஞ்., எல்கை வரை) செப்பனிட வேண்டும். எட்டயபுரம் கோவில்பட்டி மெயின் ரோ ட்டிலிருந்து நடுவிற்பட்டி கடை பஜாருக்கு வரும் சந் தை பேட்டை ரோடு குண்டும் குழியுமாக மழை கா லங்களில் சகதிக்காடாக கா ட்சியளிக்கிறது. போக்குவரத்து நலன்கருதி சந்தை பேட்டை ரோட்டை செ ப்பனிட வேண்டும். மேலரதவீ தி ரோடும், கடை பஜார் செ ல்லும் நடுரோடும் சந்திக்கும் இடத்தில் மழைநீர் தே ங்காமல் இருக்கும்படி ரோ டு செப்பனிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.