Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருக்காட்டுப்பள்ளியில் ரூ82 லட்சத்தில் சாலைப்பணி பேரூராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                    26.10.2010

திருக்காட்டுப்பள்ளியில் ரூ82 லட்சத்தில் சாலைப்பணி பேரூராட்சி தலைவர் தகவல்

திருக்காட்டுப்பள்ளி, அக்.26: திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் நடப்பு ஆண்டில் ரூ81.90 லட்த்திற்கான சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பேரூராட்சி தலைவர் கோகிலா சிங்காரவேலு கூறினார்.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம் தலைவர் கோகிலா சிங்காரவேலு தலைமையில் நேற்று நடந்தது. தலைமை எழுத்தர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் குணசேகரன், வளர்மதி, ராகவன், மணி மேகலை, மங்கையர்கரசி, இளங்கோவன், கண்ணகி, ரகமத்துல்லா, கதிரேசன், ரதி, தன்ராஜ், மெய்யழகன் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர் மெய்யழகன் பேசுகையில், சாலைப்பணிக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார். கவுன்சிலர் ரகமத்துல்லா, எனது வார்டில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. வரும் 10ம்தேதி அலுவலகம் முன் உண்ணவிரதம் இருப்பேன் என்றார். கவுன்சிலர் ராகவன், நான் 2 சாலைப்பணிகள் கேட்டிருந்தேன். செய்து தரப்படவில்லை. எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என்றார். கவுன்சிலர் தன்ராஜ், எனது வார்டுக்கு கடந்த 4 ஆண்டுகளாக எந்த வேலையும் செய்த தரவில்லை என்றார்.

பேரூராட்சி தலைவர் கோகிலா சிங்காரவேலு பேசுகையில், பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ரூ1.29 கோடிக்கு சாலைப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை பேரூராட்சிகள் இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில் சிறப்பு சாலைகள் திட்டம் 2010&11ன் கீழ் ரூ81.90 லட்சத்திற்கான பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளனர். இதில் நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை.

தன்ராஜ் வார்டுக்கு ரூ5 லட்சத்தில் குளம்தூர் வாரும் பணி கொடுக்கப்பட்டதை அவர் தான் புறக்கணித்தார். அடிப்படை வசதிகள் செய்து தர எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். கவுன்சிலர் குணசேகரன், தலைவர் கூறியது சரி என் றார். பின்னர் 4 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Last Updated on Tuesday, 26 October 2010 09:41