Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

44 டவுன் பஞ்.,களில் ரூ. 24 கோடியில் தார் ரோடு

Print PDF

தினமலர்                31.10.2010

44 டவுன் பஞ்.,களில் ரூ. 24 கோடியில் தார் ரோடு

கொடுமுடி: ஈரோடு மாவட்டத்தில் புதிய தார் ரோடு அமைப்பதற்காக, தமிழக அரசு 24 கோடியே 22 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 44 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் புதிய தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக்கொண்டு அடுத்த நான்கு மாதத்துக்குள் பணிகளை பூர்த்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. "சிறப்பு சாலைத்திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அமலாகும் பஞ்சாயத்துகள் மற்றும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம்: அந்தியூர் 72.82 லட்சம் ரூபாய், ஆப்பக்கூடல் 73.78 லட்சம், அரியப்பம்பாளையம் 56.74 லட்சம், அத்தாணி 48.58 லட்சம், அவல்பூந்துறை 49.19 லட்சம், பவானிசாகர் 75 லட்சம், பி.பி.அக்ரஹாரம் 31 லட்சம் சென்னிமலை 30.32 லட்சம், சென்னசமுத்திரம் 45.6 5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சித்தோடு 72.20 லட்சம், ஜம்பை 54.319 லட்சம், காஞ்சிக்கோயில் 51.79 லட்சம், கொடுமுடி 60.94 லட்சம், கருமாண்டிசெல்லிபாளையம் 30.22 லட்சம், கூகலூர் 83.99 லட்சம், லக்கம்பட்டி 78.90 லட்சம், நம்பியூர் 72.95 லட்சம், பெரியகொடிவேரி 50.54 லட்சம், பெருந்துறை 76.53 லட்சம், சிவகிரி 75.53 லட்சம், சூரியம்பாளையம் 76.24 லட்சம், வாணிப்புத்தூர் 36.67 லட்சம், வெங்கம்பூர் 74.77 லட்சம், அம்மாபேட்டை 48.76 லட்சம், அறச்சலூர் 57.70 லட்சம், எலத்தூர் 49.33 லட்சம், காசிபாளையம் 52.72 லட்சம், கிளாம்பாடி 46.79 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கெம்பநாயக்கன்பாளையம் 58.01 லட்சம், கொளப்பலூர் 49.48 லட்சம், கொல்லன்கோயில் 58.05 லட்சம், பி.மேட்டுப்பாளையம் 48.75 லட்சம், மொடக்குறிச்சி 49.89 லட்சம், நல்லாம்பட்டி 57.07 லட்சம், நசியனூர் 49.68 லட்சம், நெரிஞ்சிப்பாடி 43.95 லட்சம், ஒலகடம் 55.24 லட்சம், பள்ளபாளையம் 52.94 லட்சம், பாசூர் 30.72லட்சம், பெத்தாம்பாளையம் 51.57 லட்சம், சலங்கபாளையம் 52.49 லட்சம், ஊஞ்சலூர் 13.16 லட்சம், வடுகபட்டி 59.77 லட்சம், வெள்ளோட்டாம்பரப்பு 55.66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சாலைத்திட்ட நிதியில் நடக்கும் பணிகள் தேர்தல் வருவதற்குள் முடிக்கப்படும். இந்நிதியில் செய்யப்படும் பணிகள் பெரும்பாலும் அ.தி.மு.., கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளிலேயே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.