தினமலர் 10.11.2010
சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ.57 லட்சம் ஒதுக்கீடு
மதுராந்தகம் : அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், சிமென்ட் சாலைகள் அமைக்க, 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் நேரு நகர், தாமரை குளம், காந்தி நகர், பெரியர் நகர், ஓம்சக்தி நகர், எம்.கே.எம்., நகர் உட்பட நகரின் அனைத்து பகுதியிலும் சாலை மிகவும் மோசமாக இருந்தது. சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அதன் பேரில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சாலைகளை சீரமைக்க, 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதியில் காந்தி நகர், பெரியார் நகர், ஓம்சக்தி நகர், எம்.கே.எம்., நகர் பகுதிகளில், சிமென்ட் சாலை அமைக்க பேரூராட்சி முடிவு செய்துள்ளது.