Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.3.95 கோடி​யில் சாலை​கள் மேம்​பாடு

Print PDF

தினமணி             20.11.2010

ரூ.3.95 கோடி​யில் சாலை​கள் மேம்​பாடு

கோவில்​பட்டி,​​ நவ.​ 19: ​ ​ சிறப்பு சாலை மேம்​பாட்​டுத் திட்​டம் 2010-11-ன் கீழ் கோவில்​பட்டி நக​ராட்சி பகு​தி​யில் ரூ.3 கோடியே 95 லட்​சம் மதிப்​பில் சாலை​கள் அமைக்​கும் பணிக்கு நகர்​மன்​றக் கூட்​டத்​தில் அனு​மதி அளிக்​கப்​பட்​டது.​

​ ​ கோவில்​பட்டி நகர்​மன்​றத்​தின் அவ​ச​ரக் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ நகர்​மன்​றத் தலைவி மல்​லிகா தலைமை வகித்​தார்.​ நக​ராட்சி ஆணை​யர் விஜ​ய​ரா​க​வன்,​​ துணைத் தலை​வர் சந்​தி​ர​மெüலி முன்​னிலை வகித்​த​னர்.​ கூட்​டத்​தில் நடை​பெற்ற விவா​தங்​கள்:​ ​

​ ​ கவுன்​சி​லர் மதி ​(காங்.)​:​ வேலா​யு​த​பு​ரம் பஸ் நிறுத்த பணி​கள் நடை​பெ​றுமா?​

ஆணை​யர்:​ பணி தொடங்​கிய பின்பு நிறுத்​தப்​பட மாட்​டாது.​

​ ​ நாக​ரா​ஜன் ​(தி.மு..)​:​ துப்​பு​ரவு பணி​யா​ளர்​கள் போது​மான அளவு இல்லை.​ நக​ரி​லுள்ள சுமார் 12 பெரிய வாறு​கால்​களை சுத்​தப்​ப​டுத்த ஜே.சி.பி.​ இயந்​தி​ரம் வாங்க வேண்​டும்.​

​ ​ தவ​மணி ​(தி.மு..)​:​ கோவில்​பட்டி நக​ரில் இர​வில் சுற்​றித்​தி​ரி​யும் பன்​றி​க​ளைக் கட்​டுப்​ப​டுத்த வேண்​டும்.​ நக​ராட்​சிக்கு ஜென​ரேட்​டர் வாங்க பல​முறை முறை​யிட்​டும் பய​னில்லை.​

​ ​ ஆணை​யர்:​ நிதி கிடைத்​த​வு​டன் ஜென​ரேட்​டர் வாங்​கு​வோம்.​ பன்​றி​க​ளைக் கட்​டுப்​ப​டுத்த ஏற்​கெ​னவே நட​வ​டிக்கை எடுத்து வரு​கி​றோம்.​ மேலும் துரி​தப்​ப​டுத்​து​வோம்.​

​ ​ செல்​வ​மணி ​(காங்.)​:​ பங்​க​ளாத் தெரு​வில் குடி​நீர் சரி​யாக விநி​யோ​கம் செய்​யப்​ப​டு​வ​தில்லை.​ இது​கு​றித்து,​​ பல​முறை முறை​யிட்​டும் எந்​த​வித பல​னும் கிடைக்​க​வில்லை.​ ​ ​ பங்​க​ளாத் தெரு பகுதி குடி​நீர் விநி​யோ​கத்​துக்கு 6 இஞ்ச் பைப் அமைக்க வேண்​டும் என்று கூறி,​​ கூட்​டத்தி​லி​ருந்து வெளி​ந​டப்பு செய்த அவர்,​​ சிறிது நேரத்​துக்கு பின் மீண்​டும் கூட்​டத்​தில் பங்​கேற்​றார்.​

​ ​ கவுன்​சி​லர்​கள் செல்​வப்​பெ​ரு​மாள் ​(தி.மு..)​,​​ கரு​ணா​நிதி ​(தி.மு..)​,​​ தெய்​வேந்​தி​ரன் ​(.தி.மு..)​,​​ பவுன்​மா​ரி​யப்​பன் ​(.தி.மு..)​,​​ ராஜேந்​தி​ரன் ​(.தி.மு..)​:​ தின​சரி சந்​தை​யி​லுள்ள ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற வேண்​டும்.​ அது​போன்று நக​ரில் அனு​ம​தி​யின்றி கட்​ட​டங்​கள்,​​ சுவர்​கள் கட்​டு​வோர் மீதும்,​​ இடிப்​ப​வர்​கள் மீதும் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ எந்​த​வித பார​பட்​ச​மும் இன்றி ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற வேண்​டும்.​​ நகர்​மன்​றத் தலைவி மல்​லிகா:​ உறுப்​பி​னர்​கள் அனை​வ​ரும் ஒருங்​கி​ணைந்து செயல்​பட்​டால் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​று​வ​தில் எந்​த​வித தயக்​க​மும் ஏற்​ப​டாது என்​றார்.​​ ​ இக்​கூட்​டத்​தில் 15 தீர்​மா​னங்​க​ளில் 12 தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.