தினகரன் 22.11.2010
வளவனூர் பேரூராட்சியில் ரூ83 லட்சத்தில் சாலை கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம், நவ. 22: வளவனூர் பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது. சேர்மன் சம்பத் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ரூ.42.75 லட்சம் மதிப்பில் குயவன் பிள்ளையார் கோவில் தெரு முதல் பஞ்சாயத்து போர்டு தெரு வரையும், கேஎம்ஆர் நகர், தொட்டிப்பாட்டை(கால்நடை மருத்துவமனை தெரு), அம்சா கோவில் தெரு, டிஎஸ் மணி நகர், ஆர்ஐ குடியிருப்பு, கண்ணபிரான் ஸ்டோர் ஆகிய 7 இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கவும், ரூ.40.40 லட்சம் மதிப்பில் பாலாஜி நகரில் (மேற்கு பாண்டி ரோடு) சிமெண்ட் சாலையும் மற்றும் வள்ளலார் நகர், சுப்ர மணியர் நகர் ஆகிய இடங்களில் தார் சாலைகள் அமைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயல் அலுவலர், துணை தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.