Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வந்தவாசியில் சாலை&சிறுபாலம் அமைக்க ரூ2.39 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்           24.11.2010

வந்தவாசியில் சாலை&சிறுபாலம் அமைக்க ரூ2.39 கோடி ஒதுக்கீடு

வந்தவாசி, நவ.24: வந்தவாசி நகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் மாலை தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், துணைத்தலைவர் வாசுகி உட்பட கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

வந்தவாசி நகராட்சியில் தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ2 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, சிறுபாலங்கள், தார்சாலை அமைக்கும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டு நகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

காயிதே மில்லத் நகர் பிரதான சாலையில் மழைநீர் கால்வாய், சிறுபாலங்கள் மற்றும் தார் சாலை அமைக்க ரூ49லட்சமும், பஜனை கோயில் தெரு மழைநீர் கால்வாய், தார் சாலை அமைக்க ரூ2.60 லட்சமும், சன்னதி தெரு மழைநீர் கால்வாயுடன் சிறுபாலங்கள், தார்சாலை அமைக்க ரூ41 லட்சமும், கம்மாள தெருவில் தார் சாலை அமைக்க ரூ4 லட்சமும், வாணியர் தெருவில் மழைநீர் கால்வாயுடன் தார் சாலை அமைக்க ரூ7.30 லட்சமும். யாதவர்&பிராமணர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க ரூ12 லட்சமும், கோட்டை தெருவுக்கு தொகுப்பு வீடு பகுதிகளுக்கு மழைநீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்க ரூ12லட்சமும், காதர்மீரா தெருவில் மழைநீர் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்க ரூ11 லட்சமும், அகத்தியர், கண்ணியப்பன், பாரதி தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க ரூ6.5 லட்சமும், கோட்டையில் உள்ள பகுதிகளில் மழைநீர்கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ11 லட்சமும் உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள வார்டுகளில் ரூ2 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் சாலை, கழிவுநீர்கால்வாய், சிமென்ட் சாலைகள், மழைநீர் கால்வாய், சிறுபாலங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.