தினமணி 24.11.2010
சிவகாசியில் 5 கோடியில் சாலைகளை சீரமைக்க முடிவுசிவகாசி
, நவ. 23: சிவகாசி நகராட்சிப் பகுதியில் ரூ 5 கோடியில் சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி நகர்மன்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்றத் தலைவர் ராதிகாதேவி தலைமை வகித்தார்.சிறப்பு சாலைகள் திட்டம்
2010-2011-ன் கீழ் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட சி.என்.அண்ணாத்துரை சாலை, சிவன் சந்நதி தெரு, நாவெட்டி தெரு, பி.கே.எஸ். தெரு, காமராஜ் சாலை ஆகியவற்றில் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ 1.19 கோடி, ஞானகிரி சாலை, பி.கே.என். சாலை ஆகியவற்றில் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 1.34 கோடி, நான்கு ரதி வீதி, விஸ்வநத்தம் சாலை, முண்டகன் தெரு, ஏ.எஸ்.கே. தங்கையா சாலை, சோலை காலனி, காத்தான் தெரு, முஸ்லிம் வடக்குத் தெரு, பி.கே.எஸ். ஆறுமுகம் சாலை ஆகியவற்றில் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ 1.30 கோடி, காமாக் சாலை, ஆறுமுகம் சாலை, புஷ்பா காலனி, பசும்பொன் சாலை, நேசனல் காலனி, அம்மன்கோவில்பட்டி நடுத்தெரு ஆகியவற்றில் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ 1.16 கோடி ஒதுக்கவும் மன்றக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. கூட்டத்தில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன், பொறியாளர் முருகன், சுதாகார அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.