தினமணி 24.11.2010
சேலத்தில் ரூ 1.69 கோடியில் புதிய தார்ச் சாலைகள்சேலம்
, நவ. 23: சேலத்தில் பாதாளச் சாக்கடைக்காக குழாய் பதித்த பகுதிகளில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 1.69 கோடியில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியது
:தமிழக அரசின் சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு
5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 5 கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டப் பணிக்கு ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. 2, 3-வது கட்டப் பணிகளுக்கு நடைபெற்ற டெண்டரில் ஒப்பந்ததாரர்கள் போதுமான அளவு கலந்து கொள்ளாததால் மறு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக ஒப்பந்ததாரர்கள்
, மாநகராட்சி அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் அசோகன், ரவி மற்றும் உதவி ஆணையர்கள் இதில் கலந்து கொண்டனர்.இல்
1.69 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு வரும் 29-ம் தேதி மீண்டும் டெண்டர் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டல பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்த இடங்களில் புதிய தார் சாலைகள் அமைக்கப்படும் என்றார்
.