Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊத்துக்கோட்டையில் ரூ77 லட்சத்தில் சிமென்ட் சாலை பேரூராட்சி முடிவு

Print PDF

தினகரன்             25.11.2010

ஊத்துக்கோட்டையில் ரூ77 லட்சத்தில் சிமென்ட் சாலை பேரூராட்சி முடிவு

ஊத்துக்கோட்டை, நவ.25: ஊத்துக்கோட்டை பேரூராட்சி கூட்டம் நடந்தது. தலைவர் அபிராமி குமரவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், ஊத்துக்கோட்டை அய்யனார் நகர், இசிஐ சர்ச் ரோடு, ரோஜா தெரு, பேரூராட்சி பின்புறம் ஆகிய பகுதிகளில் ரூ77 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கவும், நகர்ப்புற வீடுகள் கட்டும் திட்டத்தில் வங்கி மூலம் கடன் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதிமுக கவுன்சிலர் ராஜமாணிக்கம் பேசுகையில், ‘ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கேயுள்ள தரைப்பாலத்தில் மழைக் காலங்களில் வெள்ள நீர் செல்கிறது. எனவே, மேம்பாலம் அமைக்க வேண்டும்என்றார். மேம்பாலம் கட்ட பொதுப் பணித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. திமுக கவுன்சிலர்கள் எல்லப்பன், சம்சுதீன், பாலசுந்தரம், அப்துல் ரஷீத், லட்சுமி, அதிமுக கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், ஷேக் தாவூத், ரவிச்சந்திரன், அண்ணாதுரை, பத்மாவதி, ஷர்மிளா, வள்ளி கலந்து கொண்டனர்.