தினமணி 25.11.2010
சிமெண்ட் சாலைப் பணி நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு
விழுப்புரம்
, நவ. 24: விழுப்புரத்தில் போடப்பட்டு வரும் சிமெண்ட் சாலைப் பணியை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.நகரில் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகள் சேதமடைந்துள்ளன
. இந்த சாலைகளை சிமெண்ட் சாலைகளாக அமைக்க ரூ.7.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பூந்தோட்ட சாலையில் இப்பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை மண்டல இயக்குநர் ஆய்வு செய்தார். உடன் நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ், ஆணையர் அ.க.சிவக்குமார், பொறியாளர் கு.பார்த்தீபன், பணி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.