தினமணி 25.11.2010
மாநகராட்சி சிறப்புச் சாலைகள் திட்ட ஆலோசனைக் கூட்டம்
திருச்சி
, நவ. 24: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் "சிறப்புச் சாலைகள் திட்டம் 2010-11'-ன் கீழ் சாலைகளை மேம்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் த
.தி. பால்சாமி தலைமை வகித்தார். நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மழையால் பழுதடைந்த சாலைகள்
, புதை சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள், 5 ஆண்டுகளுக்கு மேலாகப் புதுப்பிக்கப்படாத சாலைகள் உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அடிப்படையில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 41.059 கிமீ நீளத்துக்கு சிமென்ட் கான்கிரீட் தளம், 47.107 கிமீ நீளத்துக்கு தார்ச் சாலை அமைக்கப்படவுள்ளது.இத்திட்டத்துக்காக அரசு மானியம் ரூ
. 25 கோடி. மொத்த மதிப்பீடு ரூ. 25.19 கோடி. இப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியது தொடர்பாக ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.