Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறப்பு சாலைகள் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு ஆட்சியர் தகவல்

Print PDF

தினகரன்                   26.11.2010

சிறப்பு சாலைகள் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு ஆட்சியர் தகவல்

கடலூர், நவ. 26: கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;

கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளில் சிமென்ட் சாலை மற்றும் தார்சாலை அமைப்பதற்கு முதல்வர் கருணாநிதி ரூ.16 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் படி நகராட்சி பகுதி யில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளது.

கடலூர்: பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்ட பகுதிகளில் சாலை பணி களை மேற்கொள்ள முதல் கட்ட மாக 32 சாலைகள் 19.12 கி.மீட்டரில் அமைப்பதற்கும், அத்துடன் 8 சாலைகளுக்கும் சேர்த்து ரூ.10.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 75 சாலைகள் அமைப்பதற்கு ரூ.10 கோடியே 32 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சி பகுதியில் 5.54 கி.மீ தூரத்திற்கு ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணிக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியில் தார்சாலைகள் அமைப்பதற்கு ரூ.ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலும், சிமென்ட் சாலைகள் அமைப்பதற்கு ரூ.ஒரு கோடியே 39 லட்சம் மதிப்பீட்டிலும் ,விருத்தாசலம் நகராட்சியில் ரூ.80 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 13 சிமென்ட் சாலைகளும், ஒரு கோடியே 50 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் 28 தார் சாலைகளும் அமைப்பதற்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ.ஒரு கோடியே 2 ஆயிரம் மதிப்பீட்டில் 14 தார் சாலைகள் அமைப்பதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை போல் சிதம்பரம் நகராட்சியில் சி.ஆர்..பி.சி திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேலரத வீதியில் ரூ 65 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளும், வேணுகோபால் தெரு, சிதம்பரம்& சிவபுரி& கவரப்பட்டு சாலை மற்றும் சிதம்பரம் ரவுண்டானா மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றுக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சிறப்பு சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.