Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.70லட்சம் மதிப்பில் ரோடுகள் அமைக்க நாசரேத் டவுன் பஞ்., கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 26.11.2010

ரூ.70லட்சம் மதிப்பில் ரோடுகள் அமைக்க நாசரேத் டவுன் பஞ்., கூட்டத்தில் முடிவு

நாசரேத் : நாசரேத் டவுன் பஞ்., சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011ம் வருடத்தின் கீழ் ரூபாய் 70லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் ரோடுகள், தார் ரோடுகள் போடுவதற்கு டவுன் பஞ்., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாசரேத் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் தலைவர் மாமல்லன் தலைமையில், நிர்வாக அதிகாரி தேவராஜ், துணைத்தலைவர் ஜமீன் சாலமோன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் நாசரேத் டவுன் பஞ்., இரண்டாவது வார்டு பிரகாசபுரம் மறுகால் துறையில் இருந்து கடம்பாகுளம் வரை செல்லும் ஓடையை தூர்வாரி கழிவுநீர் தடையின்றி செல்ல மேற்படி ஓடையை சீரமைப்பது, நாசரேத் டவுன் பஞ்.,சில் சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை மற்றும் சுகாதார கேடு, தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளதால் கொசுவை அப்புறப்படுத்த கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்குவது, அழகம்மாள் ஓடை ஆரம்பம் முதல் முடிவு வரை தூர்வாருவதற்கு இன்ஜினியரிடம் தொழில்நுட்ப அனுமதி பெற்று தூர்வாருவது, நாசரேத் டவுன் பஞ்., 17வது வார்டு அழகம்மாள் ஓடையில் உள்ள பாலம் பழுதடைந்து உள்ளது.

 இதனை பொதுநிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பது, நாசரேத் டவுன் பஞ்., சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011ம் வருடத்தின் கீழ் ரூ.70லட்சம் மதிப்பில் பெத்தானியாநகர் முதல் கந்தசாமிபுரம், திருவள்ளுவர்காலனி வரையிலும், திருமறையூர் பஸ்நிறுத்தம் முதல் ஐ.எம்.எஸ். கட்டிடம் வரையிலும், ஆசீர்வாதபுரம், சன்னதிதெரு முதல் வகுத்தான்குப்பம் ரோடு வரையிலும், பிரதர்டன் தெரு முதல் பஸ் ஸ்டாண்ட் ரோடு வரையிலும், வகுத்தான்குப்பம் மற்றும் கீழத்தெரு வரையிலும் சிமெண்ட் ரோடுகள் அமைக்கவும், என்டிஎன் தெரு, ஜெயபாண்டியன் தெரு முதல் வெள்ளரிக்காயூரணி தேவர் சிலை வரை தார் ரோடு அமைக்கவும், 2010-2011 இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியிலிருந்து ஆழ்வார்திருநகரி நீரேற்று நிலையம் கிணறு பழுது பார்த்து குழாய் விஸ்தரிப்பு பணியை ரூ.11லட்சம் மதிப்பில் மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கொம்பையா, கனியம்மாள், ராமபுஷ்பம், உத்திரக்குமார், ஜான்ஞானதாஸ், மோகன், மீனாராஜகுமாரி, ஜெசிஜேம்ஸ், அன்பு தங்கபாண்டியன், கஸ்திஜெயபால், ஜெயராஜ், செல்வின், சந்திரன், சாராள், மத்தேயு ஜெபசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.