தினகரன் 06.12.2010
திருவொற்றியூரில் சாலை விரிவாக்கப் பணி 3ம் கட்ட ஆய்வு கூட்டம்திருவொற்றியூர்
, டிச.6: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ11.5 கோடி செலவில் சுங்கச்சாவடி முதல் எர்ணாவூர் மேம்பாலம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 65 அடி சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், மந்தகதியில் பணிகள் நடக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தொடர்ந்து நடக்கிறது.திருவொற்றியூரில் ரூ
88 கோடியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்ட பணியும் முடியவில்லை. பள்ளம் தோண்டப்பட்டதோடு, மாதக்கணக்கில் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில்
, சாலை விரிவாக்கம், பாதாளச் சாக்கடை பணிகளை துரிதப்படுத்த 3ம் கட்ட ஆய்வு கூட்டம் திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.நெடுஞ்சாலைத்துறை
, மின்வாரியம், வருவாய்த்துறை, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். முடிந்துள்ள பணிகள் மற்றும் முடிவடையாத பணிக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.கூட்டத்தில்
, பொன்னேரி ஆர்டிஓ குமார், மாதவரம் தாசில்தார் உமா, நகராட்சி தலைவர் ஜெயராமன், நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.