Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

12 பேரூராட்சிகளில் ரூ8.5 கோடி மதிப்பில் சாலை பணிக்கு உத்தரவு

Print PDF

தினகரன்            07.12.2010

12 பேரூராட்சிகளில் ரூ8.5 கோடி மதிப்பில் சாலை பணிக்கு உத்தரவு

மதுரை, டிச. 7: மதுரை மாவட்டத்திலுள்ள 12 பேரூராட்சிகளில் ரூ.8.5 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க பணி ஆணைகள் நேற்று வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் திருநகர், ஹார்விபட்டி, பரவை, வாடிப்பட்டி, விளாங்குடி, அலங்காநல்லூர், சோழவந்தான், பேரையூர், டி.கல்லுப்பட்டி, வல்லாளபட்டி, பாலமேடு, எழுமலை ஆகிய பேரூராட்சிகளில் 82 சிமிண்ட் சாலைகள் அமைக்கப்பட உள் ளது. ரூ.8 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் 33 ஆயிரத்து 876 கி.மீ., நீள சாலை பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கான ஆணைகளை அந்தந்த போரூராட்சி செயல் அலுவலர்களிடம் கலெக்டர் காமராஜ் நேற்று வழங்கினார்.