தினகரன் 07.12.2010
குளச்சல் நகர் பகுதியில் ரூ98 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு நகர்மன்ற கூட்டத்தில் முடிவு
குளச்சல், டிச. 7: குளச்சல் நகராட்சியில் ரூ98 லட்சத்தில் சாலைகளை சீரமைப்பது என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குளச்சல் நகர்மன்ற அவசரக்கூட்டம் தலைவர் ஜேசையா தலைமையில் நடந்தது. ஆணையர் சர்தார், பொறியாளர் கன்னையா, சுகாதார அலுவலர் செல் வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பழனி அஜெண்டா வாசித்தார்.
கூட்டத்தில் ரூ98.4 லட்சத்தில் சன்னதி தெரு முதல் எம்.ஜி.ஆர். சாலை வரை சிமெண்ட் தளம் அமைத்தல், மற்றும் வார்டு எண்கள் 8,9,11,12,13,14 ஆகிய துறைமுகத் தெருக் கள், மாதா காலனி, சீம்பிளிவிளை, தும்பக்காட்டுவிளை, ஆண்டிப்பிள்ளை தெரு, மலவிளை, ஆசாரி மார் மேலத் தெரு, ஆசாத் நகர் முதல் பள்ளிச்சாலை ஆகிய பகுதிகளில் சிமெ ண்ட் தளங்கள் அமைப்பது, 21&வது வார்டு பண்டகசாலைபுரம் ஆசாத் தெருவில் மழை நீர் வடிகால் ஓடை யுடன் கூடிய சிமெண்ட் தளத்தை நீட்டித்து பணி செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.