Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 5 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி

Print PDF

தினமணி               09.12.2010

ரூ. 5 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி

திருப்பரங்குன்றம், டிச. 8: மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் மழையால் பாதிப்படைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணி ரூ. 5 கோடி செலவில் பூஜையுடன் (படம்) புதன்கிழமை தொடக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்புச் சாலைகளின் திட்டத்தின்கீழ் அவனியாபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைக்க, அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி இருந்தது.

இதனையடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான அவனியாபுரம், பெரியசாமி நகர்,திருப்பதி நகர்,வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 14 கி.மீ. நீள சாலைகளைச் சீரமைக்கத் திட்டமிடப்பட்டது.

புதன்கிழமை நகராட்சித் தலைவர் போஸ் முத்தையா தலைமையில், சாலைப் பணிகள் பூமி பூஜையுடன் தொடக்கி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் கருப்பசாமி,நகராட்சி செயல் அலுவலர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.