தினகரன் 10.12.2010
சாலையை சீரமைக்க ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கீடுகூடலு
£ர்,டிச.10:கூடலு£ர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் அன்னபுவனேஸ்வரி தலைமையில் நடந்தது. துணை தலைவர் அப்துல்ரகுமான், செயல் அலுவலர் ரஜினி முன்னிலை வகித்தனர். நகரா ட்சி தலைவர் பேசுகையில், தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்திற்கு மன்ற அனுமதி கோரி கடந்த 19ந்தேதி நடந்த அவசர கூட்ட த்தில் , இந்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய வார்டு உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பியபோது குறிப்பிட்ட வார்டுகளுக்கு சாலை மற்றும் நடைபாதைக்கைக்கு தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய கூட்டப்பட்டது என்றார். தலைவரின் பதிலை மினிட் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று கவுன்சிலர்கள் என்று கூறினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட் டது. பின்னர் 1 முதல் 13 வார்டுகளுக்கும் சாலை மற்றும் நடைபாதைக்கு தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்குவது. 12 வது வார்டு பகுதியில் நவீன இறைச்சி கூடத்தை மறு ஏலம் விடுவது எனவும், 6 வது வார்டு பழைய நீதிமன்ற சாலையிலுள்ள மதுக்கடையை மாற்ற வேண்டும் என்ற கவுன்சிலர் பாதுஷா விடுத்த கோரிக்கையை கலெக்டருக்கு பரிந்துரை செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.