தினகரன் 13.12.2010
பம்மல் பகுதியில் அமைச்சர் தொடக்கம் ரூ1.5 கோடி செலவில் சாலை போடும் பணி
தாம்பரம், டிச. 13: பம்மல் பகுதியில் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை போடுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பம்பல் பகுதியில் நகராட்சியும் சுற்றுலாத் துறையும் இணைந்து சூரிய அம்மன் கோயில் குளம் மற்றும் திருப்பணந்தால் ஏரி ஆகிய பகுதியை சுற்றி ரூ2.3 லட்சம் செலவில் நடைமேம்பாலம், மின் விளக்கு, இருக்கை வசதி ஆகியவற்றை செய்துள்ளன.
இதை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா, மற்றும் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ1.53 கோடி செலவில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை பம்மலில் நேற்று நடந்தது.
பம்மல் நகராட்சி தலைவர் வே.கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் வேம்புலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.