Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விகேபுரம் நகராட்சி பகுதியில் ரூ.27 கோடியில் சாலை பணிகள்

Print PDF

தினகரன்               14.12.2010

விகேபுரம் நகராட்சி பகுதியில் ரூ.27 கோடியில் சாலை பணிகள்

விகேபுரம், டிச. 14: விகேபுரம் நகராட்சியிலுள்ள 1, 10, 13, 14 மற்றும் 15வது வார்டுகளில் 7 இடங்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக் கும் பணியையும், 2, 3, 8, 10, 11, 12, 13, 16 முதல் 19 வரையி லான வார்டுகளில் உள்ள 20 இடங்களில் ரூ.97 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைத் தார்.

அப்போது அவர் பேசுகையில், இப்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஏழை, எளியவர்கள் நலனுக்காக மட்டும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் அரிசி, சத்துணவில் 5 நாள் முட்டை, இலவச காஸ், லட்சக்கணக்கானவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு திட்டங்களை இந்த ஆட்சி தான் செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சி காலத் தில் எவ்வித நலத்திட்டங் களோ அரசு வேலைவாய்ப்போ அளிக்கப்படவில்லை. எனவே இந்த ஆட்சி தொடர மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்றார்.

தொடர்ந்து பாபநாசம் பொதிகை அடியில் உள்ள ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். கவுன்சிலர் ராஜன்கான் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் முருகன் வரவேற்றார். இதில் தொமுச பேரவை செயலாளர் பரணி சேகர், தலைவர் நெடுஞ்செழி யன், இளைஞரணி செயலா ளர் செல்வம், கவுன்சிலர்கள் ஜான்சி, ஜெயபிரகாஷ், இசக்கிப்பாண்டியன், செல்வி, பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சபாநாயகர் துவக்கி வைத்தார்விகேபுரம் அய்யனார்குளத்தில் ரூ.25 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைத்தார்.

Last Updated on Tuesday, 14 December 2010 06:28