தினகரன் 15.12.2010
சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ரூ.1.17 கோடியில் சிமென்ட் சாலை
சங்கரன்கோவில், டிச. 15: சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தில் ரூ.1.17 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது.
தமிழகத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் விதமாக தமிழ அரசு சிறப்பு சாலை என்ற திட்டத்தின் மூலம் அனைத்து நகராட்சியிலும் சாலைகளை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சங்கரன்கோவில் நகராட்சியில் திருவேங்கடம் சாலையில் இருந்து திருநீலகண்ட ஊரணி மேற்கு பகுதி வழியாக கழுகுமலை சாலை வரை யில் சிமென்ட் சாலைக்கு ரூ.50 லட்சமும்,
அம்பேத்கர் நகரிலிருந்து திருநீலகண்ட ஊரணி கிழக்கு பகுதி வழி யாக கழுகுமலை சாலை வரை யில் சிமென்ட் சாலைக்கு ரூ. 32 லட்சமும், மாதாங்கோவில் தெருவில் சிமென்ட் சாலைக்கு ரூ. 18 லட்சமும்,
சங்கர்நகர் 1ம் தெருவில் சிமென்ட் சாலைக்கு ரூ.4.5 லட்சமும், திருவேங்கடம் சாலையில் இருந்து அம்பேத்கர் தெரு வரையில் சிமென்ட் சாலைக்கு ரூ.12.5 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்க தமிழக அரசு ரூ.1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
அனைத்து பணிகளை யும் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தினால் சங்கரன்கோவி லில் குண்டும் குழியுமாக காட்சி அளித்த சாலைகள் அனைத்தும் புத்துயிர் பெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பணிகள் தீவிரம்
சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து பணிகளை யும் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தினால் சங்கரன்கோவி லில் குண்டும் குழியுமாக காட்சி அளித்த சாலைகள் அனைத்தும் புத்துயிர் பெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.