டிசம்பர்18 முதல் சாலை பழுதுபார்க்கும் பணி: மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை, டிச. 12: சென்னை நகர சாலைகளை தார்க்கலவை மூலம் பழுதுபார்க்கும் பணி டிசம்பர் 18-ம் தேதி முதல் தொடங்கும் என்று மாநகராட்சி ஆணையர் டேவிதார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சென்னை நகரில் பருவ மழையின் காரணமாக 2,554 சாலைகள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் உள்ள பள்ளங்களை கட்டட இடிபாடுகள் கொண்டு சீரமைக்கும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெறுகிறது. இந்தப் பணி முடிந்த பிறகு சேதமடைந்த சாலைகள் தார்க் கலவை கொண்டு செப்பனிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் டேவிதார் கூறியது: சாலை பள்ளங்களை கட்டட இடிபாடுகளால் சீரமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. சேதமடைந்த சாலைகளில்
தார்க் கலவை கொண்டு பழுது பார்க்கும் பணி டிசம்பர் 18 -ம் தேதி முதல் தொடங்கும். இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு இறுதியும் செய்யப்பட்டுவிட்டன என்றார்.
சென்னை நகரில் பருவ மழையின் காரணமாக 2,554 சாலைகள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் உள்ள பள்ளங்களை கட்டட இடிபாடுகள் கொண்டு சீரமைக்கும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெறுகிறது. இந்தப் பணி முடிந்த பிறகு சேதமடைந்த சாலைகள் தார்க் கலவை கொண்டு செப்பனிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் டேவிதார் கூறியது: சாலை பள்ளங்களை கட்டட இடிபாடுகளால் சீரமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. சேதமடைந்த சாலைகளில்
தார்க் கலவை கொண்டு பழுது பார்க்கும் பணி டிசம்பர் 18 -ம் தேதி முதல் தொடங்கும். இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு இறுதியும் செய்யப்பட்டுவிட்டன என்றார்.