Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைப் பணிகள் குறித்து மேயர் ஆய்வு

Print PDF

தினமணி                    04.08.2012

சாலைப் பணிகள் குறித்து மேயர் ஆய்வு

திருச்சி, ஆக. 3:  திருச்சி  மாநகராட்சி  ஸ்ரீரங்கம்  மற்றும்  கோ-அபிஷேகபுரம்  கோட்டங்களில் நடைபெற்று  வரும்  வளர்ச்சிப்  பணிகளை  மேயர்  அ. ஜெயா,  ஆணையர்  வே. ப.  தண்டபாணி ஆகியோர்  வெள்ளிக்கிழமை  நேரில்  பார்வையிட்டு  ஆய்வு  செய்தனர் . 8-வது  வார்டு  இ ஆர் மேல்நிலைப்   பள்ளி  பின்புறத்தில்  கழிவுநீர்   வடிகால்   சீரமைக்கும்  பணிகள்,  9-வது  வார்டு ராமமூர்த்தி நகர் சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மேலச் சிந்தாமணி கோட்டை வாய்க்கால் தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றையும் இவர்கள் பார்வையிட்டனர்.மேலும், 60-வது வார்டு வெள்ளாளத்தெரு,  தியாகராஜர்  நகர் சாலைப்  பணிகள்,  50-வது  வார்டு  சத்யா நகரில் மழைநீர் மற்றும்  கழிவுநீர்  வடிகால்  கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்   போது,  துணை மேயர் ம. ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் எம். லதா, ஆர். ஞானசேகர், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, மாமன்ற  உறுப்பினர்கள்  எஸ்.  சிவசங்கர  ராஜவேலு, வி. அய்யப்பன், அ. நத்தர்ஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.