தினமலர் 08.08.2012
ரூ.34 லட்சத்தில் தார் சாலை: சேர்மன் ஆய்வு
பள்ளிபாளையம்: ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில், 34.20 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தார் சாலை அமைக்கும் பணியை, சேர்மன் யுவராஜ் ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து, நான்காவது வார்டில், 2011-12ம் ஆண்டு நபார்டு நிதியுதவித் திட்டத்தில், கன்னிகாடு ரயில்வே கேட் முதல் சின்னாக்கவுண்டம் பாளையம் பாலம் வரை, தார் சாலை அமைக்க, 34.20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அப்பணியை, டவுன் பஞ்சாயத்து சேர்மன் யுவராஜ், துணைத்தலைவர் செல்லதுரை ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.