Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்

Print PDF
தின மணி          23.02.2013

கோபி பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்


கோபி அருகிலுள்ள கங்கம்பாளையம்- கோபி- ஈரோடு மெயின்ரோடு இணைப்புச் சாலையை ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கும் பணியை கோபி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை துவக்கி வைத்தார்.

கோபி அருகிலுள்ள நஞ்சவுண்டம்பாளையம்- கள்ளிப்பட்டி வரையிலான 2.5 கி.மீ. நீளமுள்ள இணைப்புச் சாலை மிகவும் பழுதடைந்திருந்தது. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் இந்த இணைப்புச் சாலை அமைக்கும் பணியை கோபி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

பழுதடைந்த சாலை காரணமாக சரியாக போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது. அது புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து சீராகும். இந்த 3 கி.மீ. நீளமுள்ள இணைப்புச் சாலையில் 10 சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் அடங்கும்.

கோபி மேற்கு ஆர்ச் முதல் காசிபாளையம் வரை சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை விஸ்தரிப்புப் பணிகளையும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

மொடச்சூரிலிருந்து கெட்டிச் செவியூர் வரையில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் சாலை விஸ்தரிப்புப் பணிகளையும் அவர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கோபி கோட்டாட்சியர் பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சின்னசாமி, கோபி நகராட்சித் தலைவர் ரேவதிதேவி, கோபி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியபாமா வாசு, வழக்குரைஞர் வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 25 February 2013 11:56