கிளாம்பாடியில் ரூ. 17 லட்சத்தில் தார்ச் சாலை அமைப்பு
ஊஞ்சலூர் அருகே கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ. 17 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கிளாம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கருமாண்டாம்பாளையம் பஸ் நிறுத்தம் முதல் ஈஞ்சம்பள்ளி செல்லும் சாலையைப் புதுப்பிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக நபார்டு வங்கி மூலம் ரூ. 17 லட்சம் ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பேரூராட்சித் தலைவர் சி.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார்.
ஊஞ்சலூர் அருகே கிளாம்பாடி பேரூராட்சியில் ரூ. 17 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கிளாம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கருமாண்டாம்பாளையம் பஸ் நிறுத்தம் முதல் ஈஞ்சம்பள்ளி செல்லும் சாலையைப் புதுப்பிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக நபார்டு வங்கி மூலம் ரூ. 17 லட்சம் ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பேரூராட்சித் தலைவர் சி.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார்.