தினமணி 16.04.2013
ஒருங்கிணைந்த சாலைப்பணிகள்: அடையாறில் தொடக்கம்
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருங்கிணைந்த சாலைப்பணிகள், ரூ. 12.15 கோடியில் அடையாறு மண்டலத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தப் பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன், வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே. அசோக், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த சாலைப்பணிகள்: அடையாறில் தொடக்கம்
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருங்கிணைந்த சாலைப்பணிகள், ரூ. 12.15 கோடியில் அடையாறு மண்டலத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தப் பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன், வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே. அசோக், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.