தினத்தந்தி 19.04.2013
மடிப்பாக்கத்தில் ரூ.5½ கோடியில் ஒருங்கிணைந்த சாலை பணிகள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்
மடிப்பாக்கத்தில் ரூ.5½ கோடியில் ஒருங்கிணைந்த சாலை பணிகள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்
![](http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/KASALI-1BW.jpg)
சென்னை மாநகராட்சி 14–வது பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் 187–வது வட்டத்தில் ரூ.5.5 கோடி செலவில் கார்த்திகேயபுரத்தில் 15 சாலைகளை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் தார் சாலைகளாக மாற்றுதல் மற்றும் மழைநீர் கால்வாய், நடைபாதை, தெரு விளக்குகள், கேபிள் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மண்டலக்குழு தலைவர் கொட்டிவாக்கம் ராஜாராம், மண்டல உதவி கமிஷனர் இளஞ்செழியன், செயற்பொறியாளர் நந்தக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கவுன்சிலர் உமாதியாகராஜன் வரவேற்றார்.
இந்த திட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் இ.பொன்னுசாமி, மனோகரன், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.