Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகர சாலைகளை அழகுபடுத்தும் திட்டம் தொடக்கவிழா

Print PDF

தமிழ் முரசு       02.05.2013

சென்னை மாநகர சாலைகளை அழகுபடுத்தும் திட்டம் தொடக்கவிழா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை மாநகர சாலைகளை அழகுபடுத்தும் திட்ட தொடக்க விழா ஈ.வி.கே.சம்பத் சாலையில் நடந்தது.

சென்னை மாநகராட்சி மற்றும் ‘ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கூட்டமைப்பு’ ஆகியோர் இடையே சென்னை மாநகர சாலைகளை அழகு படுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் சாலை அழகுபடுத்தும் திட்ட தொடக்கவிழா சென்னை ஈ.வி.கே.சம்பத் சாலையில் இன்று நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்து சாலை அழகுபடுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் தலைவர் சந்தீப் மேத்தா, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சாலை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜோதி வெங்கடாச்சலம் சாலை, வேப்பேரி ஹைரோடு, ராஜா முத்தையா சாலை, கங்காதீஸ்வரர் கோயில் தெரு, காந்தி இர்வின் சாலை, புரசைவாக்கம் ஹைரோடு, ராஜா அண்ணாமலை ரோடு, நாராயண குரு சாலை, போலீஸ் கமிஷ்னர் அலுவலக சாலை, பாந்தியன் சாலை, வானல்ஸ் ரோடு ஆகிய சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை கூட்டமைப்பு ஏற்றுள்ளது. இந்த சாலைகளில் உள்ள நடைபாதைகளை சுத்தம் செய்தல், சென்டர் மீடியனை சுத்தம் செய்தல், சென்டர் மீடியன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தல் போன்ற பணிகளை அந்த கூட்டமைப்பு மேற்கொள்ளும்.